For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிணற்றில் வீசி 3 குழந்தைகளைக் கொன்ற தாய்

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

3 குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்ணை பொதுமக்கள் காப்பாற்றினர்.

ஈரோடு மாவட்டம், முளப்பாளையம், தொலைபேசி நகரில் வசித்து வருபவர் தர்மலிங்கம். இவரது மனைவிகந்தேஸ்வரி. தர்மலிங்கம் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளன.பாலகிருஷ்ணபிரபு (12). சங்கீதா (6), கார்த்தீஸ்வரன் (3), ஜோதிஸ்வரி (1) ஆகிய குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கந்தேஸ்வரிக்கு மனநிலை பாதிப்படைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தைகளைகிணற்றில் வீசி விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள கிணற்றில் குதித்துள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம்கேட்ட பொதுமக்கள் கிணற்றுப் பக்கம் வந்தனர்.

அப்போது நான்கு பேரும் கிணற்றிற்குள் குதித்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தீயணைப்பு படையினருக்குபொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதேசமயம் அவர்களை மீட்க முயற்சியும் மேற்கொண்டனர். இதில்கந்தேஸ்வரியை மட்டும் பொதுமக்கள் உயிருடன் மீட்டனர். கந்தேஸ்வரி ஈரோடு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கிணற்றிற்குள் வீசப்பட்ட குழந்தைகள் சங்கீதா , கார்த்தீஸ்வரன், ஜோதீஸ்வரி ஆகியோரது உடலை தீயணைப்புபடையினர் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கப் பதிவு செய்து விசரணை செய்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X