பாஜக தலைவரானார் ஜனா கிருஷ்ணமூர்த்தி: மதுரையைச் சேர்ந்தவர்
டெல்லி:
பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக ஜனா கிருஷ்ணமூர்த்தி ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மதுரையைச் சேர்நதவர்.
டெல்லியில் சனிக்கிழமை கூடிய பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஜனா கிருஷ்ணமூர்த்தியை, பாஜக உறுப்பினர்கள் தலைவராகதேர்ந்தெடுத்தனர்.
தெஹல்கா டாட் காம் இணையதளம் ஆயுதப்பேர ஊழல் தொடர்பான வீடியோவை வெளியிட்டது. அதில் பங்காரு லட்சுமண ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்றதும்காட்டப்பதையடுத்து அவர் பாஜக தலைவர் பதவியை கடந்த மார்ச் 13ம் தேதி ராஜினாமா செய்தார்.
இதையடுத்து ஜனா கிருஷ்ணமூர்த்தி தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இப்போது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜனா கிருஷ்ணமூர்த்தி முதலில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வந்தார். அதற்குப்பிறகு ஆர்.எஸ்.எஸ்சில் சேர்ந்து பணியாற்றினார். பின்னர் பாஜகவில் சேர்ந்தார்.
ஜனா கிருஷ்ணமூர்த்தி மதுரை மாவட்டத்தைச் சேர்தவர். ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் வரவுள்ள நிலையிலும், தெஹல்கா டாட் காம் ஆயுதப்பேர ஊழலை அம்பலப்படுத்திய இந்த நேரத்தில் பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பாஜக செய்தித்தொடர்பாளர் கே.எல்.சர்மா மரணமடைந்ததையடுத்து ஜனா கிருஷ்ணமூர்த்தி பாஜகவின் முக்கிய செய்தித் தொடர்பாளராகஇருந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications