மனைவியைக் கொன்றவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை
Subscribe to Oneindia Tamil
கோவை:
மனைவியை வெட்டிக் கொன்ற கணவனுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம்தீர்ப்பளித்தது.
தேக்கம்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி, இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவிசுந்தரி (30). சுந்தரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக ராமசாமிசந்தேகப்பட்டார்.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 93 ம் ஆண்டுமனைவி சுந்தரியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராமசாமியைக் கைது செயதனர்.
கோவை தன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், நீதிபதி தணிகாசலம் விசாரணை செய்தார். அவர்அளித்த தீர்ப்பில், ராமசாமிக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications