பா.ஜ.கவில் இணைய தாமரைக்கனி முடிவு
சென்னை:
அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட தாமரைக்கனி பா.ஜ.கவில் சேர முடிவு செய்துள்ளார்.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தாமரைக்கனிக்கு சீட் தர ஜெயலலிதாமறுத்துவிட்டார். அவரது மகன் இன்பத் தமிழனுக்கு சீட் தருவதாக ஜெயலலிதாகூறினார். ஆனால் இதை தாமரைக் கனி ஏற்க மறுத்ததையடுத்து அவரைகட்சியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா.
கடந்த 1991-ம் ஆண்டு தேர்தலில் தனக்கு சீட் தரப்படாததால் ஸ்ரீ வில்லிப்புத்தூர்தொகுதியில் சுயேட்சையாக நின்று போட்டியிட்டு வென்றவர் தாமரைக்கனி. பின்அவர் அ.தி.மு.கவில் இணைந்தார்
இப்போதும் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றாலும் மக்களுக்கு சிறந்த முறையில்சேவை செய்ய முடியாது என்பதால் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து போட்டியிடதாமரைக்கனி முடிவு செய்தார்.
பா.ஜ.க., தி.மு.க., ம.தி.மு.க.போன்ற கட்சிகள் தாமரைக்கனியை தங்கள் கட்சியில்இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பா.ஜ.கவுக்கு ஸ்ரீ வில்லிப்புத்தூர்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால் பா.ஜ.கவில் இணைந்து தனது சொந்த தொகுதியானஸ்ரீ வில்லிபுத்தூரில் போட்டியிட தாமரைக் கனி முடிவு செய்துள்ளார்.