20 லட்சம் ஓட்டு வேண்டுமா?
கோவை:
வருகிற சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்பவர்களுக்குத்தான் எங்கள் ஓட்டு என ஆர்ய வைஸ்ய சமாஜம் அறிவித்துள்ளது.
கோவையில், ஆர்ய வைஸ்ய சமாஜத்தின் தலைவர் கற்பகம் ராமதாஸ் நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியதாவது:
எங்கள் ஆர்ய வைஸ்ய சமுதாயத்தினர், கோவை, ஈரோடு, சேலம், கோபி, கரூர்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, மதுரை உட்பட எல்லா இடங்களிலும் வியாபித்துள்ளனர்.
இவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டும். கோவை மேற்குத் தொகுதியில்வெற்றியை நிர்ணயிக்கும் ஓட்டின் அளவிற்கு எங்கள் இனத்தவர் உள்ளனர். பெரியகடை வீதி, வைசியாள் வீதி, பூமார்க்கெட் உட்பட பல பகுதிகளில் எங்கள் இனத்தவர்உள்ளனர்.
எங்கள் சமுதாயத்தினர் முற்பட்டோர் பட்டியலில் உள்ளனர். ஆனால் கல்வி, வேலைவாய்ப்பு, இன்ஜினியரிங், மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை பார்த்ததே இல்லை.
தொழில் அடிப்படையில் இவ்வளவு நாட்களாக தொடர்ந்துள்ளனர். பெரும்பாலும்நகை வியாபாரத்தில் இவர்கள் ஈடுபட்டிருந்ததால், ஆரம்பக் கல்வி மட்டுமே இவர்கள்கற்றுக் கொண்டுள்ளனர்.
படித்து பட்டம் பெற்றாலும், அரசு துறையில் வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை.எனவே எங்கள் இனத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அரசுவேலை வாய்ப்புகளில் சம அந்தஸ்து அளிக்க வேண்டும். கல்வி நிலையங்களில்எங்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
இத்தகைய கோரிக்கைகளை யார் ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கே எங்கள்ஓட்டு. ஏற்றுக் கொள்ளும் அரசியல் கட்சிக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகிடைக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications