ராணுவம் தாக்கி 11 விடுதலைப்புலிகள் சாவு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் பல்வேறு இடங்களில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 11 புலிகள் உயிரிழந்தனர்.இத்தாக்குதலில் 2 ராணுவ வீரர்களும் இறந்தனர்.
இதுகுறித்து இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
வெம்பூட்டுக்கெர்னி என்ற இடத்தில் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் 4புலிகள் கொல்லப்பட்டனர்.
இதே போல், ராணுவ வீரர்கள், வெலியோயா பகுதியில் 4 புலிகளைச் சுட்டுக் கொன்றனர். கிரிபென்வேவாபகுதியில் ராணுவ வீரர்கள், 3 பெண் புலிகளைச் சுட்டுக் கொன்றனர்.
சாவகச்சேரியில் புலிகள் வைத்த வெடியில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
கடந்த 3 மாதங்களில் மட்டும் 17 புலிகள் சரணடைந்துள்ளனர். தற்போது மட்டக்களப்பில் ராமசாமி சிவகுமார்என்ற வானம் என்பவர் சரணடைந்துள்ளார் என்று ராணுவ செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications