பல்டி அடித்தார் சுதானந்தம்: பு.நீ.கவில் புதிய திருப்பம்
சென்னை:
புதிய நீதிக் கட்சியில் எந்த விதமான பிளவும் இல்லை என அக்கட்சியில் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்
இது குறித்து புதன்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
புதிய நீதிக்கட்சியின் துணை தலைவர் சுதானந்தம் கட்சியிலிருந்து பிரிந்து தி.மு.கவுடன்தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக வந்துள்ள தகவல்கள்தவறானவை.
நாங்கள் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் 12 தொகுதிகள் கேட்டிருக்கிறோம்.எங்களுக்கு 12 தொகுதிகளை முதல்வர் கருணாநிதி ஒதுக்குவார் என்ற நம்பிக்கைஇன்னமும் இருக்கிறதுத
12 தொகுதிகள் ஒதுக்கப்படாவிட்டால் நாங்கள் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்.இதற்கான காலக்கெடு எதையும் கூற விரும்பவில்லை. ஏனென்றால் இன்னமும் தேர்தல்தேதிகளே அறிவிக்கப்படவில்லை என்றார்.
சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது சுதானந்தமும் உடனிருந்தார். அவரும்சண்முகத்தின் கருத்தை ஆதரித்தார். நான் இன்னமும் புதிய நீதிக் கட்சியில் தான்இருக்கிறேன்.
நான் புதிய நீதிக் கட்சிக்கு, தே.ஜ.கூட்டணியில் அதிக தொகுதிகள் வேண்டும் என்பதுகுறித்தே கருணாநிதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications