ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியிடம் ரூ.48,000 கொள்ளை
Subscribe to Oneindia Tamil
பூனா:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிகாரியிடமிருந்து ரூ 48,000திருடப்பட்டுள்ளது.
இந்திய - ஆஸ்திரேயியா அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட்போட்டி பூனாவில் நடந்தது.
இந்த போட்டியின் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அதிகாரி ஜாக் காம்ப்பெல்ஓட்டலில் அறையெடுத்து தங்கியிருந்தார். அப்போது அவர் ஓட்டல் அறையில்வைத்திருந்த ரூ 48,000 திருடப்பட்டுள்ளது.
காம்ப்பெல் தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் பை ஒன்றில் காமிராவையும், ரூ48,000மும் வைத்திருந்தார்.
திருடர்கள் பணத்தை மட்டும் திருடியுள்ளனர். இந்த திருட்டு சம்பவத்தில் ஓட்டல்ஊழியர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக2 ரூம் பாய்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆனால் அவர்களிடமிருந்து பணம் எதுவும் கிடைக்கவில்லை என போலீசார்தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications