கூடுதல் தொகுதிகள் கேட்டு திமுகவுக்கு திருநாவுக்கரசு தலைவலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எம்ஜிஆர் அதிமுகவுக்கு வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட 3தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் மேலும் தொகுதிகள் கிடைப்பதற்காக முயற்சி செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் எம்ஜிஆர் அதிமுக பொதுச்செயலாளர்எஸ்.திருநாவுக்கரசு கூறியதாவது:

வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட எங்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் தொகுதிகள்ஒதுக்குமாறு திமுக பொருளாளரும், தேர்தல் குழு தலைவருமான ஆர்க்காடு வீராசாமியிடம் வேண்டுகோள்விடுத்துள்ளேன்.

ஒதுக்கப்பட்டுள்ள 3 தொகுதிகள் தவிர எத்தனை சீட்டுக்கள் அதிகமாகத் தந்தாலும் அதை நாங்கள் வரவேற்போம்.

நாங்கள் முதலில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 சீட்டுக்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டோம்.ஏனெனில் நாங்கள் தொகுதிப் பங்கீடு விஷயத்தில் எவ்விதப் பிரச்சனையும் செய்ய விரும்பவில்லை.

நாங்கள் இடம்பெற்றுள்ள திமுக கூட்டணி மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்உள்ளது. திமுக கூட்டணி இந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதும், முதல்வர் கருணாநிதியேதொடர்ந்து முதல்வராக வேண்டும் என்பதும்தான் எங்களது விருப்பம்.

மதிமுக, திமுக கட்சிகளுக்கிடையே உள்ள பிரச்சனையில் நான் எதுவும் கருத்துக் கூற முடியாது. ஏனெனில்கருணாநிதியும், வைகோவும் அரசியலில் நன்கு அனுபவம் பெற்றவர்கள். அவர்களது பிரச்சனையில் நான்குறுக்கிட முடியாது என்றார் திருநாவுக்கரசு.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+