பாண்டிச்சேரி: கருணாநிதி-கண்ணன் தொகுதி பங்கீடு
சென்னை:
திமுகவும், புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சியும் செவ்வாய்க்கிழமை தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
இதன்படி புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் கருணாநிதியும், புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் நிறுவனத் தலைவர் கண்ணன்,தலைவர் லட்சுமி நாராயணன் ஆகியோரும் கையெழுத்திட்டனர்.
இதையடுத்து கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், புதுவையில் திமுக கூட்டணியில் பாஜக, விடுதலைசிறுத்தைகள், புத்தபெருமாள் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வரும் சட்டசபைத் தேர்தலில்போட்டியிடுகின்றன.
இந்தக் கட்சிகளுடன் செவ்வாய்க்கிழமை மாலை பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீட்டிற்கான ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும்.
செவ்வாய்க்கிழமை செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு பாண்டிச்சேரியில்மண்ணடிப்பேட்டை, பாஹூர், குருவிநத்தம், நெட்டப்பாக்கம், உப்பளம், காரைக்கால் தெற்கு, விளியாந்தூர்,காசுக்கடை, ஹோசாடு ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications