பாண்டிச்சேரியில் அதிமுக கூட்டணியில் பிளவு?
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் வரும் சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து அதிமுக, காங்கிரஸ்கட்சிகளிடையே ஒன்றரை மாதமாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து மூன்றாவது அணிஅமைப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.
இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி வட்டாரங்கள் கருத்துக் கூறுகையில், பாண்டிச்சேரியில் வரும் சட்டசபைத்தேர்தலில் பாமகவும், அதிமுகவும் இணைந்து போட்டியிடுகின்றன.
அதிமுக 17 தொகுதிகளிலும், பாமக 13 தொகுதிகளிலும் போட்டியிடும். இதற்கான அறிவிப்பு செவ்வாய்க்கிழமைமாலை அல்லது புதன்கிழமை காலை வெளியாகும் என்று தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, பாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவர் நாராயணசாமி மர்றும் பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம்டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோரைச் சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்துத் தெரிவிப்பார்கள்என்று தெரிகிறது.
யு.என்.ஐ.