அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்கலாம்: நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
வாக்காளர் அடையாள அடையாள அட்டை இல்லாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால்அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால்தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் பணி இன்னும் முடிவடையவில்லை.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என சிந்தனையாளர்அமைப்பு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்தசென்னை உயர் நீதிமன்ற தலைமை நிதிபதி என்.கே.ஜெயின் மற்றும் நீதிபதி கே.சம்பத் அடங்கிய பெஞ்ச் அளித்ததீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தேர்தல் கமிஷன் அனைத்து வாக்காளர்களுக்கும் அடையாள அட்டை வழங்க முயற்சி எடுத்தது. ஆனால்அனைத்து வாக்காளர்களுக்கும் அடையாள அட்டை வழங்க முடியவில்லை. எனவே வாக்காளர் அடையாளஅட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது என வலியுறுத்த முடியாது.
வாக்காளர் அடையாள அட்டையாள இல்லாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தால்அவர்கள் ரேஷன்கார்டு, பாஸ்போர்ட் போன்றவைகளை ஆதாரமாக காட்டி வாக்களிக்க அனுமதிக்கப்படவேண்டும்.
இது குறித்த உத்தரவு எல்லா தேர்தல் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் இது குறித்தஅறிவிப்பை பத்திரிக்கை, டிவி மூலமாக வெளியிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications