For Quick Alerts
For Daily Alerts
Just In
இந்தியா வந்தார் கிளின்டன்
மும்பை:
குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற 8 நாட்கள் சுற்றுப்பயணமாகசெவ்வாய்க்கிழமை இரவு இந்தியா வந்தார் அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன்.
இந்தியா வந்துள்ள கிளின்டன் புதன்கிழமை மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரைசந்தித்துப் பேசுகிறார்.
வியாழக்கிழமை பிரபல இந்திய வர்த்தகர்களான திருபாய் அம்பானி மற்றும் ரத்தன் டாடா ஆகியோரைச் சந்தித்துப்பேசுகிறார்.
கிளின்டன் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தனக்காக ஒதுக்கப்பட்ட பிரத்தயேக அறையில் தங்கியுள்ளார்.
கிளின்டன் தனது இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்த மாதம் 10 ம் தேதி அமெரிக்கா திரும்புகிறார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, April 4, 2001, 5:30 [IST]