நேபாளத்தில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
காட்மாண்டு:
நேபாளத்தில் புதன்கிழமை காலை 4.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் இந்தநிலநடுக்கத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
நேபாளத்திலுள்ள பூகம்பவியல்துறை ஆராய்ச்சியாளர்கள் நிலநடுக்கம் குறித்துக் கூறுகையில், தலைநகர்காட்மாண்டுவிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிலென்கி மற்றும் டொலாகா மாவட்டங்களில்புதன்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் அதிகாலை 4.53 மணிக்கு ஏற்பட்டது. திபெத்தின் எல்லைப்பகுதியான இந்த இரண்டு மாவட்டங்களும்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டன. ஆனால் இந்த நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோஏற்படவில்லை என்று கூறியுள்ளனர்.
நேபாளத்தில் இதே போல் 1988 ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 750 பேர் கொல்லப்பட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications