ஊட்டியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடம் இடிப்பு
ஊட்டி:
ஊட்டி ஓட்டலில் அனுமதியின்றி கட்டப்பட்ட இரண்டு மாடிக் கட்டடத்தை நகராட்சி இடிக்கத் தொடங்கியுள்ளது.
ஊட்டி நகராட்சியில் 7 மீட்டர் உயரத்துடன் 250 சதுர அடி பரப்பளவிற்கு மேல் கட்டக் கூடாது என்ற நிபந்தனைஉள்ளது. இதற்கு மேல் கட்ட மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற வேண்டும்.
வர்த்தக நிறுவனங்கள் கட்டடங்கள் கட்ட சென்னையில் உள்ள அரசு குழுவிடம் அனுமதி பெற வேண்டும். இந்தநிலையில் அனுமதி பெறாமல் 300க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது தெரிய வந்தது.அவற்றை இடிக்கக் கூடாது என கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதில், 16 வணிகக் கட்டடங்கள், 7 மீட்டர் உயரத்திற்கும் மேல் கட்டப்பட்டிருந்தது. இதில் ஒரு ஹோட்டலும்அடங்கும். ஒரு கோடீஸவரருக்குச் சொந்தமான 4 மாடிக் கட்டடம் இதில் அடங்கும்.
தரைத் தளத்துடன் நான்கு மாடிக்கும் மேல் 7 மாடி வரை இவர் கட்டியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதிகமாகக்கட்டப்பட்ட தளத்தை இடிக்கமாவட்ட கலெக்டர் நகராட்சிக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி அந்த மாடிக்கட்டடத்தை அதிகாரிகள் இடிக்கத் தொடங்கியுள்ளனர்.