சொந்த சின்னத்தில் மட்டுமே போட்டியிடுங்கள்: தேர்தல் ஆணையம்
சென்னை:
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்கள் கட்சி சின்னங்களில்தான் போட்டியிட வேண்டும் என தேர்தல் ஆணையம்அறிவித்துள்ளதால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவிருந்த சில தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.தலைமையிலான அணியில் போட்டியிடவிருக்கும் விடுதலை சிறுத்தைகள்,எம்.ஜி.ஆர். கழகம், தமிழ்நாடு ஐக்கிய முஸ்லீம் ஜமாத், உழவர் உழைப்பாளர் கட்சி ஆகியவை தி.மு.க. சின்னமான உதயசூரியன் சின்னத்தில்போட்டியிடவிருந்தன.
ஆனால் இப்போது தேர்தல் ஆணையம் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அந்தந்த கட்சிக்கான சின்னத்தில் போட்டியிட வேண்டும் எனஅறிவித்துள்ளதால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவிருந்த இந்த கட்சிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து முதல்வர் கருணாநிதி கூறுகையில், இந்த பிரச்சனை குறித்து இந்த மாதம் 9ம் தேதி தேர்தல் ஆணையர் கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில்விவாதிக்கப்படும்.
புதிய நீதிக்கட்சி தி.மு.க வில் இணையுமா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.தி.மு.க.174 தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறது என்றார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் திருமாவளவன் கூறுகையில், பாண்டிச்சேரியில் எங்களுக்கு மேலும் இரண்டு தொகுதிகள் வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம். இது குறித்து தி.மு.க. தோர்தல் குழுவினர் பேசி முடிவெடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்இந்த மாதம் 10ம் தேதி அல்லது 11ம் தேதி வெளிடப்படும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications