இந்தியா - ஈரான் டெஹ்ரான் ஒப்பந்தத்தில் கையெழுத்து
டெஹ்ரான்:
இந்திய பிரதமர் வாஜ்பாயின் ஈரான் வந்திருப்பது, இந்தியா அமைதியை விரும்புகிறது. மதசார்பின்மையைபின்பற்றுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என் ஈரான் பிரதமர் முகமது கடாமி புகழாரம்சூட்டியுள்ளார்.
பிரதமர் வாஜ்பாய் ஈரானுக்கு 4 நாள் பயணமாக சென்றுள்ளார். பிரதமர் வாஜ்பாயும், ஈரான் அதிபர் முகமதுகடாமியும் முக்கியத்துவம் வாய்ந்த டெஹ்ரான் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
இந்தியாவும்,ஈரானும் மத சகிப்புத்தன்மை,பல மதத்தவரையும் பாதுகாப்பது, சகோதரத்துவம் ஆகியவற்றை பேணிகாத்து வருகிறது. இவற்றை தொடர்ந்து பின்பற்றுவோம் என டெஹ்ரான் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா - ஈரானிடையேயான பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தையின் போது கடாமி கூறுகையில், ஈரான்எப்போதும் இந்தியாவின் மதசார்பின்மை கொள்கைகளை மதிக்கிறது. அந்த கொள்கைகளையும், இந்தியபாரம்பரியத்தையும் தொடர்ந்து பின்பற்றி வரும் சிறந்த தலைவர் வாஜ்பாய் என்றார்.
1992ம் ஆண்டு அயோத்தியா பிரச்சனைகளுக்கு பின் ஈரான் இந்தியாவில் நடைபெற்றுவரும் நிகழ்வுகளைஉன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்நிலையில் ஈரான் அதிபர் இந்தியாவை பாராட்டி பேசியது முக்கியத்துவம்பெறுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications