ஜெ. தேர்தலில் போட்டியிட முடியாது என்கிறார் கருணாநிதி
சென்னை:
டான்சி நிலப் பேர ஊழல் வழக்கில் தனக்குக் கொடுத்த தண்டனையை ரத்து செய்யும்படி ஜெயலலிதா தொடர்ந்தவழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதையேகாட்டுகிறது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது அவர் தேர்தலில் நிற்கமுடியாது என்பதையே காட்டுகிறது.
அதாவது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது. டான்சிநிலப்பேர ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்கப்பட்டதால்அவரால் தேர்தலில் போட்டியிட வேண்டாம்.
மேலும் வழக்கை விசாரித்த நீதிபதி மலை சுப்ரமணியம் கூறுகையில், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறதுஎன்றும், ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா, முடியாதா என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவுசெய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்என்று நாங்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவில்லை.
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது என்று கிடைத்துள்ள தீர்ப்பு திமுகவுக்குக் கிடைத்த வெற்றி அல்ல.தமிழக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. ஜெயலலிதாவுக்கு 1996 ம் ஆண்டு தேர்தலில் மக்கள் தண்டனைகொடுத்தார்கள். மேலும் பல ஊழல்கள் புரிந்த அவர் மீது நாங்கள வழக்குத் தொடர்ந்தோம்.
திமுக கூட்டணியில் இருந்த போது, தமாகா மற்றும் பாமக கட்சிகள், ஊழல் வழக்குகளில் ஜெயலலிதா மேல்நடவடிக்கை எடுக்க திமுக ஏன் தயக்கம் காட்டுகிறது என்று கேட்டார்கள். இப்போது அவர்களே அதிமுககூட்டணியில் உள்ளனர்.
ஜெயலலிதாவின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜெயலலிதா சுப்ரீம்கோர்ட்டுக்குச் சென்றாலும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை.
திமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சேருமா என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள்தமிழகத்தில் 9 தொகுதிகளும் பாண்டிச்சேரியில் 1 தொகுதியும் கேட்கிறார்கள். இதுகுறித்துப் பேச்சுவார்த்தைநடத்திக் கொண்டிருக்கிறோம் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications