அ.தி.மு.க.வேட்பாளர்களுக்கு தேர்தல் நிதி வழங்குகிறார் ஜெ.
சென்னை:
அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் நிதி அளிப்பதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறியதையடுத்து, அவரிடமிருந்து தேர்தல் நிதி பெற அ.தி.மு.க சார்பில் தேர்தலில்போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் அனைவரும் திங்கள்கிழமை மதுரை சென்றனர்.
தமிழ்புத்தாண்டு தினமான சனிக்கிழமை அ.தி.மு.க.பொதுச் செயலாளர் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில்அ.தி.மு.க.சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் கொடுக்கப்பட்ட அனைவரையும் சென்னையிலேயே இருக்குமாறு கூறியிருந்தார்ஜெயலலிதா. சனிக்கிழமை ஒவ்வொரு வேட்பாளராக அழைத்து அனைவருக்கும் வேட்பாளர் அத்தாட்சி கடிதத்தைகொடுத்தார் அ.தி.மு.க. தலைமை நிலைய நிர்வாகி சங்கரலிங்கம்.
ஆனாலும் வேட்பாளர்கள் யாரும் தலைமை நிலையத்திலிருந்து செல்லவில்லை. தேர்தல் நிதி இல்லாமல் என்னசெய்வது? யாரிடம் கேட்பது என கவலை கொண்டிருந்தனர்.
இது குறித்து சங்கரலிங்கம் ஜெயலலிதாவுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்ததும், ஜெயலலிதா தாராளமாக தேர்தல்நிதி கொடுக்கப்படும். மதுரை வந்து பெற்றுக் கொள்ளச் சொல்லுங்கள் என கூறினார்.
இதனால் தேர்தல் நிதி பெற அனைத்து அ.தி.மு.க.வேட்பாளர்களும் மதுரை கிளம்பி சென்றுள்ளனர்.