இன்று விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து புதன்கிழமைவிண்ணில் ஏவப்படுகிறது.
இந்தியாவில் முதல்முதலாக உருவாக்கப்பட்டது ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட். இது கடந்த மாதம் 28 ம் தேதிஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் ஏற்பட்டதொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் ஏவப்படவில்லை.
இதையடுத்து கடந்த 18 நாட்களில் விஞ்ஞானிகள் ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறுகளை முற்றிலும் சீரமைத்துஇயல்பு நிலைக்குத் திருப்பியுள்ளனர்.
இதையடுத்து புதன்கிழமை மாலை 3.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது.
வானிலை மாற்றம் இருந்தாலும் திட்டமிட்டபடி, ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்று இந்தியவிண்வெளி ஆராய்ச்சி நிலைய செய்தித்தொடர்பாளர் கூறினார்.












Click it and Unblock the Notifications