இந்தியாவுக்குள் பாக்.தோண்டிய சுரங்கப்பாதை அழிப்பு
டெல்லி:
இந்திய - பாகிஸ்தான் எல்லைப்பகுதில் 135 கெஜ தூரத்திற்கு தோண்டப்பட்டிருந்த சுரங்கப்பாதை அழித்துமூடிபட்டு விட்டதாக உள்துறை இணை அமைச்சர் வித்யாசாகர் தெரிவித்தார்.
இதுகுறித்து உள்துறை இணை அமைச்சர் வித்யாசாகர் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை கூறுகையில்,பஞ்சாப், குர்தாஸ்பூர் மாவட்டதில், இந்திய பாகிஸ்தான் எல்லையில் 135 கெஜ தூரத்திற்கு சுரங்கப்பாதைதோண்டப்பட்டிருப்பதை சென்ற மாதம் 1ம் தேதி எல்லை பாதுகாப்பு படையினர் கண்டு பிடித்தனர்.
இரண்டிக்கு மூன்றடி என்ற அளவில் தோண்டப்பட்டுள்ள இந்த 135 கெஜ தூரமுள்ள சுரங்கப்பாதையில் 50 ஜெகதூரம் பாகிஸ்தானில் உள்ளது. தொடர்ந்து இந்திய எல்லைக்குள் சுரங்கம் தோண்டப்பட்டுக் கொண்டிருப்பதைஎல்லை பாதுகாப்பு படையினர் கண்டு பிடித்தனர்
இதுகுறித்து பாகிஸ்தானிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கண்டனமும் தெரிவித்தனர். இதையடுத்து இந்தசுரங்கப்பாதை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் அழித்து மூடப்பட்டது.
இப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரும் தொடர்ந்து தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ. உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில்தீவிரவாதத்தை தூண்டி வருகிறது. ஐ.எஸ்.ஐ.க்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளது என்பது உறுதியாகதெரியவில்லை. அதுபோல் இந்த சுரங்கப்பாதை மூலம் விடுதலைப்புலிகள் போதைப் பொருட்கள் மற்றும்ஆயுதங்களை பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகளுக்குக் கடத்தினார்களா என்பது குறித்தும் உறுதியான தகவல்கள்இல்லை எனக் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications