For Daily Alerts
Just In
கூத்தாண்டவர் கோவிலில் அலிகள் திருவிழா
உளுந்தூர்பேட்டை:
விழுப்புரம் உளுந்தூர்பேட்டை கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் அலிகள் திருவிழா வரும் 24 ம் தேதிதொடங்குகிறது.
அடுத்த மாதம் 11 ம் தேதி வரை இந்தத் திருவிழா நடக்கவுள்ளது.
வரும் 24 ம் தேதி மாலை 4 மணிக்கு சாகை வார்த்தல் திருவிழா நடக்கிறது. 25 ம் தேதி மாலை 4 மணிக்குபந்தலடியில் தாலி கட்டுதல் திருவிழாவும் 26 ம் தேதி இரவு 10 மணிக்கு சந்தனு சரிதம் சாமி புறப்பாடும் நடக்கிறது.
அலிகள் திருவிழாவையொட்டி கம்பம் நடுதல், பாலாயணம், அலிகள் தாலிகட்டிக் கொள்ளுதல், காளி கோவிலில்உயிர் பெறுதல், தர்மருக்குப் பட்டாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது.
Comments
Story first published: Thursday, April 19, 2001, 5:30 [IST]