For Quick Alerts
For Daily Alerts
Just In
கள்ளக் காதல் விவகாரம்: இலங்கை அகதி தற்கொலை
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே இலங்கை அகதி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
கீதன் (வயது 50) என்பவரும், இவரது மனைவி செல்லக்கண்ணு ஆகிய இருவரும்இலங்கை அகதிகள். இவர்கள் அகதிகளாக குடிவந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது.கீதன் கூலி செய்துவந்தார்.
கீதன் வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததன் காரணமாககணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை இருந்து வந்தது.
இதனால் மன வருத்தம் கொண்ட கீதன் காட்டுக்குள் சென்று தன் மீது மண்ணெண்ணைஊற்றி தீ வைத்துக் கொண்டார்.உடல் கருகி ஆபத்தான நிலையில் அவர் வேதாரண்யம்அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்துபோனார்.
இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள்.
Comments
Story first published: Saturday, April 21, 2001, 5:30 [IST]