ஸ்டாலினுக்கு இந்து முன்னணி, பிராமணர் சங்கம் கண்டனம்
சென்னை:
நினைத்தவுடன் என்னை முதல்வராக்க தி.மு.க. என்ன சங்கர மடமா என்று கூறிய மு.க.ஸ்டாலினுக்கு இந்துமுன்னணி அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் முதல்வர் கருணாநிதி பேசிய தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றுஇருந்தால் அதை யாரும் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். இதை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்தி எதிர்பிரசாரத்தில் ஈடுபட்டன.
எதிர்க்கட்சியினரின் பிரசாரத்திற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதிலில், என்னை நினைத்தவுடன் முதல்வர்பதவியில் அமர்த்த தி.மு.க. தலைமை என்ன சங்கர மடமா என்று கேட்டிருந்தார்.
ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு கடும் விமரிசனம் கிளம்பியுள்ளது. இந்து முன்னணி அமைப்பு ஸ்டாலினைக்கண்டித்துள்ளது. ஸ்டாலினின் கருத்துக்கள் இந்துக்களையும், சங்கர மடத்தையும் அவமதிப்பதாக இருப்பதாகக் கூறிஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த முரளி மற்றும் ஜெயராமன்ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர்நாராயணன் வெளியிட்ட அறிக்கையில், தனது கருத்துக்களுக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுகோரியுள்ளார்.