8 தொகுதிகளிலும் வெல்வோம்- இந்திய கம்யூனிஸ்ட்
சென்னை:
அ.தி.முக கூட்டணியில் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலையில் கூட்டணியின் அடுத்ததலைவர் யார் என்பதை அ.தி.மு.கதான் முடிவு செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலசெயலாளர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த நல்லகண்ணு கூறுகையில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதேசமயத்தில், கேரள மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளையின் மனு ஏற்கப்பட்டுள்ளது.சட்டப்படிதான் இந்த இரு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
கூட்டணியின் பெரிய கட்சி அ.தி.மு.க. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட முடியாதசூழ்நிலையில், கூட்டணியின் அடுத்த தலைவர் யார் என்பதை ஜெயலலிதா தான் முடிவு செய்ய வேண்டும்.
முதல் கட்டப் பிரசாரத்தில், நாங்கள் போட்டியிடும் 8 தொகுதிகளில் நான்கு இடங்களில் பிரகாசமான வெற்றிவாய்ப்பு காணப்படுகிறது.
தொண்டர்களிடையேயும், மக்களிடையேயும் உற்சாகம் காணப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும்எங்களுடன் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். சேர்ந்தே மக்களிடம் வாக்கு கேட்கிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications