For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

18 வருடம் ஜெயாவுக்கு வன வாசம் தான்: சுவாமி ஆரூடம்

By Staff
Google Oneindia Tamil News

பட்டுக்கோட்டை:

இன்னும் 18 ஆண்டுகளுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது என்றுஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறினார்.

வியாழக்கிழமை நிருபர்களுக்குப் பேட்டியளித்த போது,

ஜெயலலிதா 3 ஆயிரம் கோடி ரூபாயைக் கொள்ளையடித்து வெளிநாடுகளில்வைத்துள்ளார்.

பணத்தை சுருட்டுவதில் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் அவ்வளவு வித்தியாசம்ஒன்றும் கிடையாது.

ஜெயலலிதாவுக்கு சரியான தண்டனை கிடைத்துள்ளது.

அவர் இன்றைய சூழ்நிலையில் சட்டப்படி தேர்தலில் நிற்க முடியாது. அவர் எப்போதுவேண்டுமானாலும் ஜெயிலுக்குத்தான் போக நேரிடும்.

அவர் இன்னும் 18 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்றார்.

மு.க. ஸ்டாலின்:

ஜெ குறித்து ஸ்டாலின் கூறுகையில், 5 ஆண்டுகளுக்கு முன் ஊழல் ஆட்சி செய்து வந்தஜெயலலிதா, வேட்புமனுக்கள் தள்ளுபடியாகும் என்று தெரிந்தும் அதைச் செய்தார்.மனுக்கள் தள்ளுபடி ஆகிவிட்டன. இது கருணாநிதி செய்த சதி அல்ல; ஜெயலலிதாவின்விதி.

குமரி அனந்தன்:

குமரி அனந்தன் கூறுகையில், அரசு ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைமுதல்வராக இருந்தபோதே ஜெ. மீறியிருந்தார்.

கிருஷ்ணகிரியில் வேட்புமனு தாக்கல் செய்த போதே "நான் இரண்டு தொகுதிகளுக்குமேல் போட்டியிட மாட்டேன்" என்று சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்துப்போட்டுவிட்டு, மேலும் இரண்டு இடங்களில் போட்டியிட மனு கொடுத்து தேர்தல்சட்டத்தையும் மீறியுள்ளார்.

இது அறிந்தே செய்த குற்றம். எனவே, ஜெயலலிதா மனுக்கள் தள்ளுபடியானதால்அனுதாப "அலை"யும் வராது; "இலை"யும் வராது.

ஆர்.எம். வீரப்பன் கருத்து:

1996ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மக்கள் மன்றம் ஜெயலலிதாவைப்புறக்கணித்தது. இப்போது அவர் தேர்தலில் நிற்கவே முடியாது என்று இந்தியத் தேர்தல்சட்டம் தீர்ப்பு கூறியுள்ளது.

"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்பார்கள். அவர் செய்த ஊழல்களெல்லாம்அவரைத் துரத்திக் கொண்டிருக்கின்றன.

திருநாவுக்கரசு:

இந்தத் தேர்தலில் மட்டுமல்ல, அடுத்த தேர்தலிலும் ஜெயலலிதா போட்டியிட முடியாது.ஏனென்றால் இவரால் 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது.

தேர்தல் கமிஷனின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் ஜெயலலிதாவின் நான்குவேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இது மாநில, மத்திய அரசுகளின் சூழ்ச்சிஎன்று ஜெ. கூறுவது தவறு.

திருமாவளவன்:

ஜெயலலிதாவின் 4 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால், அதிமுகவின்எதிர்காலம் கேள்விக் குறியாகிவிட்டது. அதிமுக கட்சி செய்த அராஜகத்துக்குக் கிடைத்தபரிசுதான் இது.

எப்படியாவது திமுகவினரைப் பழிவாங்க வேண்டும் என்று ஜெ. முயற்சி செய்தார். அதுநடைபெறாமல் போய்விட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X