நாகர்கோவிலில் ஸ்டாலின் ஆயுர்வேத சிகிச்சை
நாகர்கோவில்:
வரவிருக்கும் தமிழக சட்டபை தேரத்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிகட்சி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்து வருகிறார்தமிழக முதல்வரும்.தி.மு.க.தலைவர் கருணாநிதியின் மகனும், சென்னை நகரமேயருமான மு.க.ஸ்டாலின்.
கருணாநிதியின் தேர்தல் பிரச்சார பட்டியலில் கன்னியாகுமரி இடம் பெறவில்லை.இதனால் கன்னியாகுமரியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இவரது பிரச்சாரத்தில் தி.மு.க. அரசின் 5 ஆண்டு சாதனைகள்பற்றி விளக்கமாகபேசுகிறார். சாதனையை பட்டியலிட்டு ஆதரவு திரட்டி வருகிறார்.
ஸ்டாலின் பிரச்சாரக் கூட்டத்திற்கு பத்மனாபபுரம், கன்னியகுமரி ஆகிய இடங்களைத்தவிர மற்ற இடங்களில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை.
இந்நிலையில் ஸ்டாலின் முதல் நாள் பிரச்சாரத்தின் போதே கால்வலியால்அவதிப்பட்டதாக தி.மு.கவினர் கூறினர். கால்வவலிக்காக கன்னியாகுமரிமாவட்டத்தில் இருக்கும் பிரபலமான ஆயுர்வேத மையத்தில் எண்ணெய் தேய்த்துஸ்டாலின் சிகிச்சை எடுத்துக் கொண்டார் எனவும் தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.