சேலத்தில் பெண் அதிகாரி மீது ஆசிட் வீச்சு
சேலம்:
சேலத்தில் பெண் அதிகாரி மீது ஆசிட் வீசியவரைப் போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ளது அரிசிபாளையம். இங்கு பாலசுப்ரமணியம் என்பவரின் மனைவி அனுசூயா (46),என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
இதே அலுவலகத்தில் மலைச்சாமி என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில்மலைச்சாமிக்கும், அனுசூயாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மலைச்சாமி, அனுசூயாவை ஆபாசமாகத்திட்டியுள்ளார்.
இதனால் அனுசூயாவும் மற்றொரு அலுவலரான கல்யாணியும் சூரமங்கலம் போலீசில் மலைச்சாமியைப் பற்றிபுகார் செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மலைச்சாமியைக் கைது செய்தனர்.
பெயிலில் வந்த மலைச்சாமி, அனுசூயாவைப் பழிவாங்க முடிவு செய்தார். இதனால், அனுசூயா வீட்டிற்கு முன்புஅமர்ந்திருந்தபோது ஆசிடை அவரது முகத்தில் வீசிச் சென்றார். இதில், அனுசூயாவின் முகம், கழுத்து ஆகியஇடங்கள் கருகியது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் டிரைவர்மலைச்சாமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications