For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொளுத்தும் வெயிலுக்கு 15 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

புவனேஸ்வர்:

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் ஆதிக்கம் தலைதூக்கத் துவங்கி விட்டது. ஒரிசாவில் வெப்பம் 44 டிகிரியைத் தொட்டுவிட்டது.

2 ஆண்டுகளுக்கு முன் புயல் மழைக்கு ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்த ஒரிசாவில், இந்த ஆண்டு கடும் வெயில் காரணமாகஇதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மட்டுமே இறந்திருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஆரம்பிக்க இன்னும் 15 நாட்கள் இருந்த போதிலும், பள்ளிகளை இப்போதேமூடிவிடும்படி அரசு உத்தரவிட்டிருக்கிறது.

ராஜஸ்தான், டெல்லியிலும்கூட மக்கள் வெப்பத்தின் தாக்கத்தை உணர்ந்து கொண்டிருக்கின்றனர். ராஜஸ்தானில் 40 முதல் 45 டிகிரி வரைவெப்பம் நிலவுகிறது.

சமீப காலங்களிலேயே 1998-தான் அதிக வெப்பம் கொண்ட ஆண்டாகக் கருதப்படுகிறது.அப்போது டெல்லியில் மட்டும் 46.5 டிகிரிவெப்பம் பதிவாகியது.

ஒரிசாவில் ஏற்பட்ட வெப்பம் காரணமாக மட்டும் 2,080 பேர் இறந்துள்ளனர். குறைந்தது இன்னும் ஒரு வாரத்துக்காவது இந்தவெப்பம் நீடிக்கும் என்று வானிலை நிறுவனம் கூறுகிறது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X