கொளுத்தும் வெயிலுக்கு 15 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்:

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் ஆதிக்கம் தலைதூக்கத் துவங்கி விட்டது. ஒரிசாவில் வெப்பம் 44 டிகிரியைத் தொட்டுவிட்டது.

2 ஆண்டுகளுக்கு முன் புயல் மழைக்கு ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்த ஒரிசாவில், இந்த ஆண்டு கடும் வெயில் காரணமாகஇதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மட்டுமே இறந்திருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஆரம்பிக்க இன்னும் 15 நாட்கள் இருந்த போதிலும், பள்ளிகளை இப்போதேமூடிவிடும்படி அரசு உத்தரவிட்டிருக்கிறது.

ராஜஸ்தான், டெல்லியிலும்கூட மக்கள் வெப்பத்தின் தாக்கத்தை உணர்ந்து கொண்டிருக்கின்றனர். ராஜஸ்தானில் 40 முதல் 45 டிகிரி வரைவெப்பம் நிலவுகிறது.

சமீப காலங்களிலேயே 1998-தான் அதிக வெப்பம் கொண்ட ஆண்டாகக் கருதப்படுகிறது.அப்போது டெல்லியில் மட்டும் 46.5 டிகிரிவெப்பம் பதிவாகியது.

ஒரிசாவில் ஏற்பட்ட வெப்பம் காரணமாக மட்டும் 2,080 பேர் இறந்துள்ளனர். குறைந்தது இன்னும் ஒரு வாரத்துக்காவது இந்தவெப்பம் நீடிக்கும் என்று வானிலை நிறுவனம் கூறுகிறது.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+