மார்ச். 2002 ல் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும்
கோவை:
ராமர் கோயில் கட்டும் பணியை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் துவக்குவோம் என விஸ்வ ஹிந்து பரிசத்தின் சர்வதேசத் தலைவர்அசோக் சிங்கால் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ராமர் கோயில் கட்டும் பணியை அடுத்த ஆண்டு துவக்க உள்ளோம். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அடுத்த ஆண்டு பிப்ரவரிமாதம் 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை 5000 சாதுக்கள் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
ராமர்கோயில் கட்ட முதல் தளத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. தூண்கள் தயாரிக்கும் பணியும் நடந்துவருகிறது. 2002ம் ஆண்டு சிவராத்திரியின்போது இந்தப் பணி துவங்கப்படும். ராமர்கோயில் கட்டுவதால் பாரதிய ஜனதாதலைமையிலான ஆட்சிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. இதனால் வன்றைச் சம்பவம் எதுவும் நடக்காது. இப்போது மட்டும்எங்கு வன்முறை ஏற்படாமல் இருக்கிறது?
விஸ்வஹிந்து பரிஷத் முடிவால் மத்திய அரசு கவிழ வாய்ப்பு இல்லை. அவ்வாறு வாய்ப்பு ஏற்பட்டாலும், ராமர்கோயில் கட்டும்திட்டத்தைக் கைவிட மாட்டோம். இந்த ராமஜென்ம பூமி தொடர்பான வழக்கின் தீர்ப்பிற்காக நாங்கள் காத்திருக்கத் தயாராகஇல்லை.
இது ராமர் கோயிலுக்குச் சொந்தமான இடம். இங்கு ராமர் கோயில்கட்ட காங்கிரஸ் கட்சியினர் உட்பட அனைத்து கட்சியினரும்ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியாவைப் போன்ற மதச்சார்பின்மையற்ற அரசு உலகில் வேறு எங்கும் கிடையாது.
வரும் அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் விஜயமந்திர அனுஷ்டானம் தொடங்கவுள்ளோம். இந்த வேள்வியில் 2 கோடி பேர், 2இலட்சம் இடங்களில், 2 மாதங்களில் 13 கோடி முறை "ஸ்ரீராம், ஜெயராம், ஜெயஜெய ராம் என்ற மந்திரத்தை உச்சரிப்பர். இதன்மூலம் இந்தியாவிற்கு நன்மை ஏற்படும். குற்றங்கள் குறையும். ஏன், உலகிற்கே நன்மை ஏற்படும் என்றார் அசோக் சிங்கால்.