ஸ்டாலின் முதல்வராகலாம்: அன்பழகன்
கரூர்:
மு.க.ஸ்டாலின் முதல்வராவதில் என்ன தவறு இருக்கிறது என அன்பழகன் கேள்வி எழுப்பினார்.
கரூரில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து கல்வி அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமானக.அன்பழகன் பேசியதாவது:
தண்டனை பெற்றதால் ஜெயலலிதா தேர்தலில் நிற்க முடியவில்லை. தற்போது அவர் பெற்ற தண்டனையை கூட்டிக்கழித்துப் பார்த்தால் 22 ஆண்டுகள் வரும். இன்னும் உள்ள வழக்குகளில் தண்டனை பெற்றால், எல்லாம் சேர்த்துமொத்தம் 50 ஆண்டுகளாவது தேரும். எனவே, அவர் எப்போதும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைஉருவாகும்.
இரண்டுக்கு நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். அதிகாரிகளை மிரட்டியோ, அவர்களைசரிக்கட்டியோ தேர்தலில் போட்டியிடலாம் என முடிவு செய்து விட்டார். அவர் நேரடியாக வேட்பு மனுத் தாக்கல்செய்யாத தொகுதிகளில், யாரோ கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததாகச் சொல்கிறார். ஆட்சிக்கு வந்தால், யார்யாரோ எப்படி வேண்டுமாலும் எங்கு வேண்டுமானலும் கையெழுத்துப் போடுவார்களோ?
மு.க.ஸ்டாலின் முதல்வராகத் தகுதியில்லையா? அவர் என்ன தவறு செய்தார்? கருணாநிதிக்கு அடுத்து நான் தான்முதல்வர் ஆக வேண்டும் என வைகோ கூறியுள்ளார். முதல்வராவது பற்றி நானல்லவா சொல்லவேண்டும்.அதைப்பற்றி ஏன் அவர் கவலைப்பட வேண்டும் என்றார் அன்பழகன்.