பட்டாபிராமில் ஒரு வித்தியசமான காட்சி
சென்னை:
சென்னை அருகே உள்ள பட்டாபிராம் என்ற இடத்தில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் ஒரே மேடையில் தோன்றி, தாங்கள்தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன செய்வோம் என்று பேசி பிரசாரம் மேற்கொண்டனர்.
பட்டாபிராம் பகுதியில் உள்ள இளைஞர் விழிப்புணர்வு அமைப்பு சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பூவைசெழியன் (திமுக), பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சண்முகம், மதிமுக வேட்பாளர் அந்திரி தாஸ், புரட்சி பாரதம் வேட்பாளர்பூவை மூர்த்தி, மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 7 வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட முன்னாள் டி.ஜி.பி. லட்சுமி நாராயணன், வேட்பாளர்கள் மக்களுக்குத் தரும்வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
வித்தியாசமான இந்த நிகழ்ச்சியை பட்டாபிராம் பகுதி மக்கள் திரளாகக் கலந்து கொண்டு பார்த்தனர்.