வீட்டில் 100 வெடிகுண்டுகள்.... பெண் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ராமேஸ்வரத்தில் 100 வெடிகுண்டுகளை வைத்திருந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகில் வசித்து வருபவர் வெற்றிவேல். இவர் ஒரு மீன் வியாபாரி. இவரதுமனைவியான புஷ்பம்(40), வீட்டில் வெடிகுண்டுகளுடன் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, புஷ்பம் வீட்டிலிருந்தபோது, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீஸார் வீட்டைமுற்றுகையிட்டனர். பின்னர் நடத்தப்பட்ட சோதனையில், 50 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 50டெட்டனேட்டர்களைப் பறிமுதல் செய்தனர்.
அனுமதியில்லாமல் இவற்றை வைத்திருந்ததால், புஷ்பத்தைப் போலீஸார் கைது செய்தனர். மீன்களைப்பிடிப்பதற்காக இவற்றை புஷ்பம் வைத்திருந்ததாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications