வாஜ்பாய்க்கு தமிழ்ச் சங்கம் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழை செம்மொழியாக்க பிரதமர் வாஜ்பாய் மறுத்தால், அவர் தேர்தல் பிரசாரத்திற்காக சென்னை வரும்போதுகறுப்புக் கொடி காட்டப் போவதாக தலைநகர் தமிழ்ச் சங்கம் எச்சரித்துள்ளது.
பிரதமர் வாஜ்பாய் வரும் 7-ம் தேதி சென்னை வருகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துஅவர் பேசுகிறார். இந்த நிலையில், பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டப் போவதாக தலைநகர் தமிழ்ச் சங்கம்எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் சார்பில் சென்னை நகரில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவற்றில், தமிழைசெம்மொழியாக்க வேண்டும். அப்படி சேர்க்காவிட்டால், பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும் என்றுகூறப்பட்டிருந்தது.
இந்தப் போஸ்டர்களை போலீஸார் உடனடியாக கிழித்து எறிந்தனர். சென்னை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும்பலப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications