சகோதரருக்காக பிரச்சாரத்தை ரத்து செய்தார் ஜெ.
சென்னை:
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் வெள்ளிக்கிழமை சென்னையில் பிரச்சாரம்செய்வதாக இருந்த அ.தி.மு.க, பொதுச்செயலாளர் ஜெயலலிதா ராமதாஸ்வேண்டுகோளுக்காக பிரச்சாரத்தை ரத்து செய்தார் என கூறப்படுகிறது.
இந்தமாதம் 10ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அ.தி.மு.க.மற்றும் கூட்டணி வேட்பாளர்களைஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஜெயலலிதா சென்னையில் வெள்ளிக்கிழமை பிரச்சாரம் செய்வார் எனஅறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென சென்னை பிரச்சாரத்தை ரத்துசெய்துவிட்டார்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் மட்டுமே முடிந்துள்ளது. மற்றபகுதிகளிலும் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்னை பிரச்சாரத்தை வைத்துக்கொள்ளலாம் என்ற முடிவில்தான் சென்னை பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது எனகூறப்பட்டது.
ஆனால் அ.தி.மு.க.தொண்டர்கள் பலர் கூறுகையில். திருவண்ணாமலையில்போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த பிறகு மற்றஇடங்களில் பிரச்சாரம் செய்யுமாறு ராமதாஸ் கேட்டுக் கொண்டதால் ஜெயலலிதாசென்னை பிரச்சாரத்தை ரத்து செய்தார் என கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications