For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொட்டும் மழையில் 2 கொலைகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதுராந்தகம் அருகே சென்னையைச் சேர்ந்த இரண்டு ரவுடிகள் பட்டப்பகலில், கொட்டும் மழையில் பயங்கரமாகபடுகொலை செய்யப்பட்டனர்.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் குமார் (35). இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள்உள்ளனர். சமீபத்தில் கோடம்பாக்கத்தில் குமார் என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் தொடர்ாகராயப்பேட்டை குமாரை போலீஸார் தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.

தனது நண்பனான ரவுடி வடிவு என்பவரின் ஆலோசனைப்படி, வடிவின் சொந்த ஊரான மதுராந்தகம் அருகேஉள்ள வெண்ணாங்குபட்டு வேம்புலி கிராமத்திற்குச் சென்று தலைமறைவாக இருக்க முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து ஆளுக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வேம்புலி கிராமத்திற்குப் புறப்பட்டனர். அவர்கள்கிளம்பியபோது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. வேம்புலி கிராமத்தை நிெருங்கிய அவர்கள் அங்குள்ளஅம்மன் கோவில் அருகே வந்தபோது, திடீரென ஒரு கும்பல் அவர்களை வழிமறித்து நிறுத்தியது.

பின்னர் குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த குமார் அங்கேயே இறந்தார்.அதேபோல, ரவுடி வடிவையும் அக்கும்பல் பலமாக வெட்டியது. இதில் கழுத்தில் ஆழமான காயம் ஏற்பட்டு வடிவுஉட்கார்ந்த நிலையிலேயே இறந்தார்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து அறிந்ததும் மதுராந்தகம் டி.எஸ்.பி. கருணாநிதி, சூணாம்பேடு போலீஸ்இன்ஸ்பெக்டர் ராஜராஜன் ஆகியோர் போலீஸ் படையுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X