தமிழ்நாடு முழுவதும் ஜெ.அலை வீசுகிறது: காளிமுத்து
திண்டுக்கல்:
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் கும்மிடிப்பூண்டி முதல் குமரிவரை ஜெயலலிதா அலை வீசுகிறது என அதிமுக அவைத் தலைவர் காளிமுத்துபேசினார்.
திண்டுக்கல்லில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து பேசியதாவது:
வரும் மே.13ம் தேதி தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி செய்யப்படும். கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை ஜெயலலிதா அலைவீசுகிறது. மதவெறிக் கூட்டணி ஆபத்தானது. அதை விட ஆபத்தானது சாதிவெறிக் கூட்டணி.
எனவே, அதிமுகவினர் வெற்றி பெற்று பெரும்பான்மை பெறுவர். இவர்கள் சேர்ந்து ஜெயலலிதாவை முதல்வராகத் தேர்வு செய்வர்.அப்போது ஜெயலலிதாவுக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது தவிர்க்க முடியாததாகி விடும்.
பண்டாரம், பரதேசிகள் எனப் பேசிய கருணாநிதி, அதே பண்டாரம், பரதேசிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளார். அவர்களுடன்தேர்தலைச் சந்திக்கிறார். இவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றார் காளிமுத்து.












Click it and Unblock the Notifications