பரிதி இளம்வழுதி மீது தாக்குதல்: திமுக கண்டனம்
சென்னை:
தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் துணைச் சபாநாயகர் பரிதி இளம்வழுதியைத் தாக்க முயன்றபோது, அங்கிருந்தபோலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து திமுக தலைமைக் கழகச் செயலாளர் விடுதலை விரும்பி வெளியிட்ட அறிக்கை:
சென்னை எழும்பூர் தொகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் நுழைந்த ஜான் பாண்டியன் கும்பல், கட்சித் தொண்டர்களைத் தாக்கியுள்ளது.
அங்கிருந்த நாஞ்சில் மனோகரன் வீட்டிற்குள்ளும் அக்கும்பல் நுழைந்து, கார்களையெல்லாம் அடித்து நொறுக்கியது.
சட்டசபைத் துணைச் சபாநாயகர் பரிதி இளம்வழுதியைத் தாக்குவதற்காக ஜான் பாண்டியன் ஓடிவந்த போது, அங்கு இருந்த காவல்துறையினர் எதையும் கண்டுகொள்ளவில்லை.
கலவரம் நடந்து முடியும் வரையில் போலீசார் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்பதைப் பொதுமக்களேகூறினார்கள்.
5 ஆண்டுகள் நல்லபடியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த காவல் துறையினர் இவ்வாறு நடந்து கொண்ட விதம் கடும் கண்டனத்துக்குரியதுஎன்றார் அவர்.