முதல் சுற்று முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியிடப்படும்:சாரங்கி
சென்னை:
முதல் சுற்று தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர்மிருத்யுஞ்சய் சாரங்கி சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் 101 மையங்களில் ஞாயிற்றுக்கிழமைஎண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கிறது.
வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முதல் கட்ட முடிவுகள் 10 மணிக்கு வெளியிடப்படும். வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையங்களில் இருக்கும்தேர்தல் அதிகாரிகள் உடனுக்குடன் முடிவுகளை அறிவிப்பார்கள்.
அனைத்து தொகுதிகளுக்கும் 10 வாக்கு எண்ணப்படும் மேஜைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மிகப்பெரிய சட்டசபைத் தொகுதிகளுக்கு 2 அறைகளும், 10 மேஜைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் ஒருமேற்பார்வையாளரும், ஒரு உதவியாளரும் இருப்பார்கள்.
வாக்குகள் எண்ணப்படும் அனைத்து மையங்களுக்கும் கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சீல் உடைக்கப்பட்டுதேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் வாக்குகள் எண்ணிக்கை ஆரம்பமாகும்.
ஒவ்வொரு சுற்றி முடிவும், வாக்கு எண்ணும் மையங்களின் வாசலில் அமைக்கப்பட்டுள்ள கரும்பலகையில் எழுதி பொதுமக்களுக்குத்தெரிவிக்கப்படும்.
தேர்தல் முடிவுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதல் ஆறு மாதங்களுக்கு வைத்திருக்கப்படும் என்றார் சாரங்கி.
யு.என்.ஐ.