இந்து முன்னணி அமைப்பாளருக்கு அரிவாள் வெட்டு
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்:
திருப்பூரில் இந்து முன்னணி அமைப்பாளரை அரிவாளால் வெட்டியதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 9 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
திருப்பூர் செரங்காடு பகுதியைச் சேர்ந்த கோபால் (23) இந்து முன்னணி அமைப்பாளராக இருந்து வருகிறார்.
இவர் தேர்தல் நாளன்று பணி முடிந்ததும், கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பேசிக் கொண்டிருந்துவிட்டு வீட்டிற்குத் திரும்னார்.
அப்போது ஒரு கும்பல், அவரை வழிமறித்து அரிவளால் வெட்டி, கற்களால் தாக்கி கொலை செய்ய முயன்றனர்.
இதனைக் கண்ட கோபாலின் நண்பர்கள், அவர்களை விரட்டினர். இதில் இந்து முன்னணியைச் சேர்ந்த தங்கராஜ், தம்பு, ஈஸ்வரமூர்த்திஆகியோர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான கும்பலைச் சேர்ந்த 9 பேரைக் கைது செய்தனர்.இவர்கள் அனைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்.












Click it and Unblock the Notifications