பாண்டிச்சேரி ரயிலில் வெடிகுண்டு புரளி
தாம்பரம்:
சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த புரளி காரணமாகஅந்த ரயில் இரண்டரை மணி நேரம் தாமதமாக சென்றது.
திங்கள்கிழமை மாலை சென்னை கடற்கரையிலிருந்து பாண்டிச்சேரிக்கு பயணிகள் ரயில் கிளம்பிச் சென்றது. அந்தசமயம் எழும்பூர் ரயில் நிலைய அதிகாரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் பாண்டிச்சேரிபயணிகள் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சரியாக மாலை 5.45 மணிக்கு வெடிக்கும்எனவும் கூறிவிட்டு தொடர்பை துண்டித்து விட்டார்.
இந்த விஷயம் உடனடியாக எழும்பூர் ரெயில்வே போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலமாக தாம்பரம்ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் மாலை 4.50 மணிக்கு தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து கொண்டிருந்த பாண்டிச்சேரி பயணிகள்ரயிலை நிறுத்தினர்.
பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு மெட்டல் டிடெக்டர் மூலமும், மோப்ப நாய்களைக் கொண்டும்அனைத்து ரயில் பெட்டிகளிலும் சோதனை செய்யப்பட்டது.
இந்த சோதனை சுமார் இரண்டரை மணி நேரம் நடந்தது. வெடிகுண்டு எதுவும் இல்லாததால் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல் புரளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து இரண்டரை மணி நேரம்தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.












Click it and Unblock the Notifications