ஜெ. முதல்வரானதற்கு பத்திரிக்கைகள் கண்டனம்
ஊழல் வழக்கில் தண்டனை பெற்று தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படாத ஜெயலலிதா முதல்வராகமுடியுமா?அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைப்பாரா? என்ற கேள்வி நிலவி வந்தது.
ஜெயலலிதா திங்கள்கிழமை ஆளுனரை சந்தித்து தன்னை தனது கட்சி எம்.எல்.ஏக்கள் முத்லவராகதேர்ந்தெடுத்ததற்கான கடிதத்தை கொடுத்தார். ஆளுநரும் ஜெயலலிதாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இது பல பத்திரிகைகளின் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. வாஜ்பாய் சம்பிரதாய முறைப்படி ஜெயலலிதாவுக்குவாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் பா.ஜ.க. ஜெயலலிதாவுக்கு ஆளுனர் பதவி பிரமாணம் செய்து வைத்தது தவறுஎன ஆளுநரை குறை கூறியுள்ளது.
டிரிப்யூன் பத்திரிக்கை கூறுகையில், ஜெயலலிதா முதல்வரானதன் மூலம் ஜனநாயகத்திற்கு களங்கம் ஏற்பட்டுள்ளதுஎன கூறியுள்ளது.
பயோனிர் பத்திரிக்கை கூறுகையில், ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிடஅனுமதிக்கப்படாதவர் முதல்வரானது மிகவும் தவறானது என கூறியுள்ளது.
ஸ்டேட்ஸ்மேன் பத்திரிக்கை கூறுகையில், ஜெயலலிதாவுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்ததுதவறானது. இது தவறான முன்னுதாரணமாக அமைந்து விட்டது என குறை கூறியுள்ளது.
ஜெயலலிதா 1999ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ்பெற்றுக் கொண்டபின் ஜெயலலிதாவை கடுமையாக தாக்கி வருகிறது.
மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில், ஜெயலலிதா முத்லவரானது ஒருசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றார்.
ஜெயலலிதா முதல்வராகியுள்ளதால் அவர் தலைமையிலான மாநில அரசு அவர் மீதுள்ள ஊழல் வழக்குகளின்விசாரணையை துரிதப்படுத்தாது.
ஜெயலலிதா பதவியேற்ற சில மணிநேரத்தில் ஜெயலலிதாவின் வழக்குகளை விசாரணை செய்து வந்த ஒருவர்உடல் நிலை காரணமாக தொடர்ந்து பணியாற்ற முடியாது என கூறி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
ஜெயலலிதா வழக்கில் அரசு சார்பாக வாதாடி வந்த 3 சிறப்பு அரசு வழக்கறிஞர்களும் திங்கள்கிழமை தங்கள்பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
தமிழக அட்வகேட் ஜெனரல் வெங்கடபதியும், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராஜகோபாலும், ஜெயலலிதாவுக்குஎதிரான வழக்கில் ஈடுட்டு வந்த காவல்துறை அதிகாரி ஒருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய உள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில், ஜெயலலிதாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்ததன்மூலம் ஆளுநர் பாத்திமா பீவி தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த விஷயம் நீதிமன்றத்திற்குஎடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றார்.
ஜெயலலிதாவின் மீதுள்ள பல ஊழல் வழக்குகள் வருவதற்கு காரணமாக இருந்த ஜனதா கட்சி தலைவர்சுப்ரமணியம் சுவாமி கூறுகையில், ஜெயலலிதா மீதான வழக்குகள் தொடரும் விதமாக செயல்படுவேன். அவற்றைவாபஸ் பெற விட மாட்டேன். ஜெயலலிதா சட்டத்தை அவமதித்தவர். சட்டத்தை படுகொலை செய்தவர் என்றார்.
நடந்து முடிந்துள்ள 4 மாநில சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க. தோல்வியடைந்துள்ளது. இது எதிர்கட்சிகளுக்குசாதகமாகி பா.ஜ.கவுக்கு எதிரான எதிர்ப்பை அதிகமாக்கி உள்ளது. ஆனாலும் அரசியில் நோக்கர்கள் கூறுகையில்மத்தியில் ஆளும் தே.ஜ. கூட்டணிக்கு உடனடியாக எந்த ஆபத்தும் இல்லை என கூறியுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.