ஜெ. -- பிரணாப் முகர்ஜி இன்று சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

அதிமுக ஆதரவுடன் பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியமைக்கத் திட்டமிட்டுள்ளதால், இதுகுறித்து தமிழகமுதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசுவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னைவந்துள்ளார்.

சென்னை வந்துள்ள அவர் புதன்கிழமை பிற்பகல் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.

செவ்வாய்க்கிழமை இரவே சென்னை வந்துவிட்ட பிரணாப் முகர்ஜி, பாண்டிச்சேரியில் காங்கிரஸ்ஆட்சியமைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலை ஜெயலலிதாவிடம் பேசி தீர்த்து வைப்பார் என்றும் பாண்டிச்சேரியில்ஆட்சியமைக்க அதிமுகவின் ஆதரவை அவர் கேட்பார் என்றும் தெரிகிறது.

பாண்டிச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 13 இடங்களைப் பெற்றுள்ளது. இதில்தமாகா 2 தொகுதிகளையும், காங்கிரஸ் 11 தொகுதிகளையும் பெற்றுள்ளது.

யாருக்குமே தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் அதிமுகவின் ஆதரவைப் பெற்றுத்தான் பாண்டிச்சேரியில்ஆட்சியமைக்கும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.

இதனால் இதுகுறித்து ஜெயலலிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப்முகர்ஜி செவ்வாய்க்கிழமை இரவு சென்னை வந்தார். அவர் புதன்கிழமை பிற்பகல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைசந்தித்துப் பேசுகிறார்.

ஏற்கனவே பாண்டிச்சேரியில் ஆட்சியமைக்க அதிமுகவிடம் காங்கிரஸ் ஆதரவு கேட்டால் நாங்கள் கொடுக்கத்தயார் என்று ஜெயலலிதா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, பிரணாப் முகர்ஜி நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் பாண்டிச்சேரியில் ஆட்சி அமைப்பதற்குதமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் ஆதரவு கேட்போம். ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கைஇருக்கிறது.

பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கூட்டணிக்கு 13 இடங்கள் கிடைத்துள்ளது. ஆட்சியமைக்க இன்னும் 3 இடங்கள்தேவை. அதிமுக கூட்டணி 3 இடங்களைப் பெற்றுள்ளதால் அவர்களிடம் நாங்கள் ஆதரவு கேட்கிறோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+