பரிதி ஜாமீன் மனு இன்று விசாரணை
சென்னை:
எழும்பூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனுபுதன்கிழமை விசாரணைக்கு வருகிறது.
எழும்பூர் தொகுதியில் அ.தி.மு.க. ஆதரவு வேட்பாளராகப் போட்டியிட்ட தமிழக முன்னேற்றக் கழக வேட்பாளர்ஜான் பாண்டியனின் தேர்தல் ஏஜென்ட் மற்றும் அவரது ஆதரவாளர்களைத் தாக்கியதாக பரிதி இளம்வழுதி மீதுபுகார் கூறப்பட்டது.
இதையடுத்து அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்குஉடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி பரிதி இளம்வழுதியின் சார்பில் மனுத்தாக்கல்செய்யப்பட்டது. அந்த மனுவில், தி.மு.க. ஆட்சிக்காலத்தில் துணை சபாநாயகராக இருந்தேன். எழும்பூர்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன்.
தேர்தலின்போது அ.தி.மு.க. வேட்பாளர் ஜான் பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என் மீதும்,தி.மு.கவினர் மீதும் கடும் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக பத்திரிகைகளிலும் செய்தி வந்தது. ஆனால்இப்போது என் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தற்போது வேலூர் சிறையில் இருப்பதால் என்னால் எம்.எல்.ஏவாக பதவியேற்க முடியவில்லை. ஜான் பாண்டியன்ஒரு பயங்கர குற்றவாளி. அவர் மீது பல வழக்குகள் உள்ளன. நான் பதவியேற்பதற்கு வசதியாக என்னை ஜாமீனில்விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் பரிதி இளம்வழுதி.
பரிதி இளம்வழுதி தாக்கல் செய்துள்ள மனு மீது புதன்கிழமை சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி அசோக்குமார் முன்பு விசாரணைக்கு வருகிறது. இதில் பரிதி ஜாமீனில் விடுவிக்கப்படுவாரா என்பது தெரிய வரும்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications