கொச்சைப் படுத்தாதீர்கள் .. பா.ம.கவுக்கு திமுக கண்டனம்
சென்னை:
நெய்வேலி மின் ஊழியர் போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று பாட்டாளி மக்கள் கட்சிக்கு, திமுககண்டனம் தெரிவித்துள்ளது.
திமுக தொழிற்சங்க பேரவைத் தலைவர் செ.குப்புசாமி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய்வேலிதொழிலாளர்களுக்கு 1997-ம் ஆண்டே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். பாட்டாளி தொழிற் சங்கம்உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் வலியுறுத்திய பிறகும் கூட இதில் தீர்வு ஏற்படவில்லை.
கடந்த மார்ச் மாதம் நடந்த தொழிற்சங்க தேர்தலில் திமுக சார்பிலான தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் வெற்றிபெற்றதையடுத்து அங்கிகாரம் பெற்ற தனிச் சங்கமாக அது உருவெடுத்துள்ளது. அதன் அடிப்படையில்தான்தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது. பேச்சு வார்த்தையிலும் பங்கு பெற்று வருகிறது.
போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது தொழிலாளர் முன்னேற்றச் சங்கமாக இருந்தாலும் கூட அனைத்துதொழிலாளர்களும் ஒருங்கிணைந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், திமுகதான் போராட்டத்திற்கு காரணம் என்பது போல பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்ஜி.கே.மணி அறிக்கை விட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார் அவர்.