தமிழகத்திற்கு 100 மெகாவாட் மின்சாரம் தருகிறது கேரளா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்திற்கு 100 மெகாவாட் மின்சாரம் தருவதாக கேரள முதல்வர் ஏ.கே. அந்தோனி உறுதியளித்தார்.
நெய்வேலி அனல்மின் நிலையத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மேற்கொண்டதிலிருந்து,தமிழகத்தில் கடுமையான மின்தடை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் அதிகபட்ச மின்சாரத் தேவை 5,200 மெகாவாட் ஆகும். இதில் 700 மெகாவாட் வரை மின்பற்றாக்குறை நிலவுவதால், மாநிலத்தின் பல பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் உள்ளது.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசுக்கு இது கெட்ட பெயரை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதைச் சமாளிக்கஅரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் முதல் கட்டமாக கேரள முதல்வர் அந்தோனியிடம் முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை போனில்பேசினார். அப்போது தமிழக மின் பற்றாக்குறையைப் போக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார். அந்தோனியும்தமிழகத்திற்கு உதவுவதாக உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications