அசாமில் மலேரியாவுக்கு 30 பேர் பலி
கவுஹாத்தி:
அசாமில் மலேரியா நோய் காரணமாகக் குறைந்தது 30 பேர் வரை பலியாகியுள்ளனர்.
10,000க்கும் மேற்பட்டவர்கள் இந்நோயினார் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறியபோது,
பெரும்பாலும் கொசுக்களால்தான் இந்நோய் வெகு வேகமாகப் பரவி வருகிறது. போர்க்கால அடிப்படையில்மாநிலம் முழுவதும் இந்நோய்த் தடுப்புக்கான முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மலேரிய நோய்த் தடுப்புக்கான மருந்துகளை விரைந்து அனுப்பும்படி மத்திய அரசைக் கேட்டுள்ளோம்.
மலேரியாவால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ள நல்பாரி மற்றும் பார்பீடா மாவட்டங்களில் சர்வதேசச்செஞ்சிலுவைச் சங்கமும் ராணுவ மருத்துவர்களும் முழுவீச்சில் தங்கள் உதவிப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.கடந்த 2 நாட்களில் இங்கு மட்டும் 20 பேர் மலேரியா நோய்க்குப் பலியாகியுள்ளனர். பிற ஊர்களில் 10 க்கும்மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்றார் அவர்.
வடகிழக்கு மாநிலங்களில் மட்டும், மலேரியா நோய்க்கு ஆண்டுதோறும் 500 பேர் வரை பலியாகின்றனர் என்பதுகுறிப்பிடத்ததக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications