For Daily Alerts
Just In
கோவை குண்டு வெடிப்பு வழக்கு அடுத்தமாதத்திற்கு ஒத்திவைப்பு
கோவை:
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் வழக்கு விசாரணைக்காக 164 பேர்செவ்வாய்க்கிழமை ஆஜர் செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையை அடுத்த மாதம்6ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
கோவை குண்டு வெடிப்புச் சம்பவம் 1998ம் ஆண்டு நடந்தது. இந்த சம்பவத்தில்60க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இது தொடர்பாக அல் உம்மா இயக்கம், மற்றும்கேரள மக்கள் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த மதானி உட்பட 167 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கோவையில் உள்ள தனி நீதிமன்றத்தில்நடந்து வருகிறது.
இதில், செவ்வாய்க்கிழமை 164 பேர் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டடனர். அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா, ஜகாங்கீர், அய்யப்பன்ஆகியோர் வரவில்லை. இந்நிலையில் வழக்கு விசாரணையை நீதிபதி செல்வம் அடுத்தமாதம் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
Comments
Story first published: Tuesday, May 29, 2001, 5:30 [IST]