குடிபோதையில் கலாட்டா .. 2 பேருக்கு வெட்டு
சென்னை:
சென்னையில் குடிபோதையில் இருந்த 2 பேரை ஆட்டோவில் வந்த 3 பேர் கும்பல் அரிவாளால் வெட்டியது.வெட்டப்பட்டவர்களில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.
சென்னை அசோக் நகர் 15-வது அவென்யூவில் இருப்பவர்கள் பாலகிருஷ்ணன் (33), அன்புராஜ் (35). இருவரும்திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் அசோக் நகரில் இருக்கும் பிராந்திக் கடையொன்றில் மது அருந்தினர்.அப்போது வேறு 3 பேரும் மது அருந்தினர்.
சிறிது நேரத்தில் இரு தரப்பினருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. பின்னர் இரு தரப்பினரும்குடித்து விட்டுக் கிளம்பினர்.
பாலகிருஷ்ணனும், அன்புராஜும் குடித்து விட்டு வெளியே நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் தள்ளாடிநடந்து வந்து கொண்டிருந்தபோது, ஏற்கனவே மது அருந்தி விட்டு வெளியேறிய 3 பேரும் ஆட்டோவில் வந்தனர்.ஆட்டோவிைட்டு கீழே இறங்கிய அவர்கள் பாலகிருஷ்ணனனையும், அன்புராஜுவையும் சரமாரியாகஅரிவாளால் வெட்டினர். பின்னர் வந்த ஆட்டோவிலேயே சென்று விட்டனர்.
இருவரையும் அக்கம் பக்கத்தில் இருந்தோர் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அன்புராஜின்உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.