வறுமையால் குடும்பமே கூண்டோடு தற்கொலை
சேலம்:
சேலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வறுமையின் கொடுமையால் சயனைடு சாப்பிட்டு இறந்தனர்.
சேலம் அம்மாபேட்டையில் வசித்து வந்தவர் வெங்கடேசன் (40). இவரது மனைவி மணிமாலா (30). இவர்களுக்கு10 வயதில் நாகராஜ் என்ற மகனும், துர்கா என்ற பெண் குழந்தையும் இருந்தனர்.
கூலி வேலை செய்து வந்த வெங்கடேசன், குழந்தையைப் படிக்க வைக்க செலவு செய்ய முடியாமல் திணறினார்.மேலும் பள்ளிக் கூடம் அனுப்ப தேவையான பணம் இல்லாமல் திண்டாடினார். இந்த நிலையில், புதன்கிழமை இரவுஅனைவரும் காபியில் சயனைடைக் கலந்து குடித்தனர்.
இதில் அனைவரும் இறந்தனர். காலையில் வெகுநேரம் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப் பார்த்தனர்.
அப்போது நான்கு பேரும் இறந்தது கண்டு போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் 4 பேரின்உடல்களையும் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications